தினகரனுக்கு சிறைச் சாலை ரெடி

SIBY HERALD


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் உரிமை கோரி சண்டை நடந்தது.





யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தநிலையில், இரட்டை இலை சின்னத்தைப் பெற டி.டி.வி.தினகரன் ரூ.60 கோடி லஞ்ச பேரம் பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது.



இதனால் தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய கடும் விசாரணையில் தினகரனிடம் இருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ரூ.60 கோடி பேரம் பேசி முன்பணம் வாங்கியது வெளியே வந்தது.

சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லஞ்சப் புகார் வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரனிடம் சம்மன் வழங்குவதற்காக ஏப்ரல் 19ம் தேதி இரவு 11 மணி அளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்று சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் தினகரனிடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தினர்.

ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை தினகரன் ஆஜராக வேண்டுமென டெல்லி போலீஸார் சம்மனும் வழங்கினர்.

சிறை வாசத்தை தவிர்ப்பதற்காக தினகரன் 3 நாள் அவகாசம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.இது கிடைக்குமா என்பது 21 ஆம் தேதி மாலைக்குள் தெரியவரும்.

 

வெட்கத்தை விட்டு கூறுகிறார் “இது தான் முதல் முறை” அந்த கொலு கொலு நாயகி!!!


Find Out More:

Related Articles: