தேசிய கீதத்தை அருமையாக பாடி பாகிஸ்தானியர்களின் மனதை வென்ற இந்திய இசைக்குழு

J Ancie

பாகிஸ்தான் தேசிய கீதத்தைப் பாடி காணொளி வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த  இசைக் குழுவை, பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களும், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது 70-ஆவது சுதந்திர தினத்தை இந்தாண்டு கொண்டாட உள்ளன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடுகிறது.


எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக, இந்தியா மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது இந்தியாவும் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன.



பாகிஸ்தான் சுதந்திர தின பரிசாக, இந்தியர்கள் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியுள்ளனர் என எக்ஸ்பிரஸ் ட்ரைப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.பாகிஸ்தான் தேசிய கீதத்தைப் பாடும் இந்தியர்கள் - அமைதியையும் அன்பையும் பரப்பும் இந்திய நண்பர்களுக்கு நன்றி என செய்தியாளர் ஹமீத் ட்விட் செய்துள்ளார். பாகிஸ்தான் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் காணொளியைப் பகிர்ந்து வருவதுடன், இம்முயற்சியை எடுத்த இசைக்குழுவை பாராட்டியும் வருகின்றனர்

Find Out More:

Related Articles: