தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி புது வெற்றி?

J Ancie


போலியோ தடுப்பு சக்தியுடையதாக புதியதாக உருவாக்கும் வகையில் தாவர இலைகளை மாற்றியமைத்து கொள்வதில்  மாபெரும் வெற்றிபெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு முறையை மாற்றியமைக்கும் இந்த சாத்தியக்கூறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது  பார்க்கப்படுகிறது.




இத்தகைய வித்தியாசமான செயல்முறையால், செலவு குறைவாகவும், எளிதாகவும், மிக விரைவாகவும் தடுப்பு மருந்து தயாரிக்கலாம் என்று நோர்ஃபோல்கிலுள்ள ஜான் இன்ஸ் மையத்தின் பிரபல விஞ்ஞானிகள் அணியினர் கூறியுள்ளனர்.




இதனால், போலியோவை முற்றிலும் ஒழிப்பதோடு, உலக நாடுகள் திடீரென எதிர்நோக்குகின்ற பயங்கரமான ஜிகா வைரஸ் அல்லது ஈபோலா போன்ற உயிர்கொல்லி அச்சுறுத்தல்களுக்கும் இந்த அணுகுமுறை மிக உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


Find Out More:

Related Articles: