கருப்புக்கு தடை கொண்டு வந்த மோடி!

SIBY HERALD
ஜார்கண்டில் மங்கள் ஆணை திறப்பிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஐந்தாம் தேதி ஜார்கண்ட் வர உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தில் தற்பொழுது கிட்டத்தட்ட 80000 டீச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது பணிகளை சீர்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனையோடு அந்த ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.



இந்நிலையில் மோடி ஜார்கண்ட் வர உள்ளதால், இதற்கு முன்னர் மோடி சென்ற சில மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில், கோ பேக் மோடி மற்றும் போ மோனே மோடி ஹாஷ்டேக்குகள் மூலமாக மோடியை அசிங்கப்படுத்தியது போல இங்கும் நடந்து விட கூடாது என்று ஜார்கண்ட் மாநில அரசு பதட்டத்தில் உள்ளது.



எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்கண்ட் பலாமு எஸ்.பி மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எவருமே  கருப்பு வண்ணத்தில் ஷூ தவிர எதுவும் மோடி வரும் தினத்தில் உபயோகிக்க கூடாது என்று விசித்திர உத்தரவை பிறப்பித்துள்ளார். 


Find Out More:

Related Articles: