சென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்!

SIBY HERALD

சென்னையில்  மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும்  நீர்நிலைகள் வறண்டுவிட்டது.  லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின்  வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் அலுவலகம்  கேரளாவில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. 



வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வர் பினராயி  கேரள அதிகாரிகளுக்கு திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் லிட்டர் நீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


Find Out More:

Related Articles: