செவ்வாய் தோஷத்தை நீக்கும் குறுக்குத்துறை முருகன் கோவில்

Sekar Tamil
திருநெல்வேலி நகரில் இருந்து தெற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் 2½ அடி உயரத்தில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 


இந்த ஆலயத்தின் அருகே அமைந்திருந்த கற்பாறைகளை கொண்டு, இங்குள்ள முருகனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள முருகனை செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


இத்தளத்தில், தினமும் நண்பகல் உச்சி காலத்தில் திருக்குட பூஜையும், இரவு பள்ளியறை வழிபாடும் நடக்கிறது. செவ்வாய் தோஷம் உடையவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று ஆற்றில் நீராடி, முருகப்பெருமானை வலம் வந்து வழிபட வேண்டும்.  


இவ்வாறு 11 செவ்வாய் கிழமைகள், தொடர்ந்து வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் கைகூடும்.


Find Out More:

Related Articles: