பத்துமலை முருகன் கோவிலில் தாக்குதல் நடத்த திட்டம்.... அதிர்ச்சி

frame பத்துமலை முருகன் கோவிலில் தாக்குதல் நடத்த திட்டம்.... அதிர்ச்சி

Sekar Tamil
கோலாலம்பூர்:
புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 3 ஐ.எஸ். தீவிரவாதிகளை வளைத்து பிடித்துள்ளனர் மலேசிய போலீசார். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். அதிக பகதர்கள் வந்து செல்லும் கோவில்.


இந்த கோவில், பொழுதுபோக்கு மையம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


மலேசியா நாட்டின் சுதந்திர தினம் என்பதால் இத்தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மலேசியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


Find Out More:

Related Articles:

Unable to Load More