கஞ்சன்... மகா பெரிய கஞ்சன் விராட் கோலி... ரகசியம் உடைந்தது

Sekar Tamil
புதுடில்லி:
கஞ்சன்... பெரிய கஞ்சன் என்று விராட்கோலி பற்றிய ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் கிரிகெட் வீரர் யுவராஜ் சிங்.


விஷயம் என்னன்னா? டில்லியில் இருந்து இயங்கி வரும் பண்பலை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பல சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில்தான் விராட்கோலி பற்றிய ஒரு ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.


கிரிக்கெட் வீரர்கள் ட்ரெஸ்சிங் ரூமில் நடக்கும் கலாட்டாக்களையும் அவர் தெரிவித்தார். நட்சத்திர வீரர் விராட் கோலியை பற்றியும் சில விஷயங்கள் தெரிவித்தார். அதில் இந்திய அணி வீரர்களிலேயே விராட் கோலிதான் மிகப் பெரிய கஞ்சன். அவருடன் எப்பொழுது வெளியே சென்றாலும் நான்தான் செலவு செய்வேன். பணம் கொடுக்க வேண்டி அவரை வற்புறுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளார்.


 கோலியை போலவே ஆசிஷ் நெஹ்ராவும் கஞ்சத்தனமாக இருப்பாராம். எனக்கு திருமணமாகி விட்டது; இனி பணம் செலவு செய்ய இயலாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: