அவருக்கு பிறகே இவர்... டோனியின் மனம் திறந்த பேட்டி

Sekar Tamil
சென்னை:
அவருக்கு பிறகு இவரைதான் பிடிக்கும் என்று மனம் திறந்துள்ளார் இந்திய அணி கேப்டன் டோனி. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதில் இருந்து தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார் டோனி என்றால் அது மிகையில்லை. டோனியும் தமிழ் ரசிகர்களை மிகவும் விரும்புகிறார்.


தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்காக அவர் கொடுத்த பேட்டிதான் தற்போது செம வைரலாகி வருகிறது. என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? தமிழில் தனக்கு பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் சூர்யாவைதான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். 


"எனக்கு பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்த சொன்னால், முதல் மூன்று இடங்களில் ரஜினி மட்டுமே இருப்பார், நான்காவது இடத்தில் நடிகர் சூர்யா இருப்பார்" என்று அதிரடியாக சிக்ஸர் அடித்துள்ளார். அப்போ... ரஜினி... ரஜினி... ரஜினிதான்... அதற்கு பிறகுதான் யாராக இருந்தாலும் என்று அவருக்கும் தெரிந்துள்ளது. 



Find Out More:

Related Articles: