போக்கிமேன் கோவிற்காக குழந்தையை தவிக்க விட்ட பெற்றோர்

Sekar Tamil
அட என்ன பெற்றோர்ங்க நீங்க... இப்படியா செய்வது. விஷயம் என்னன்னா?


போக்கிமோன் கோ விளையாடுவதற்காக தங்களின் 2 வயது குழந்தையை வீட்டில் தனியாக தவிக்க விட்டுச் சென்ற அமெரிக்க தம்பதிக்கு போலீசார் காப்பு மாட்டியுள்ளனர். 


போக்கிமேன் கோ என்ற போதையில் சிக்கி தவித்து வருகின்றனர் அமெரிக்க மக்கள். இதனால் பல சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரிசோனா மாகாணத்தில் போக்கிமோன் கோ விளையாடுவதற்காக தங்களின் 2 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டு சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.


சான் டான் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள் ப்ரெண்ட் டாலே (27) மற்றும் சாண்ராவின் டாலே (25). இவர்கள் தங்களது 2-வயது மகனை, வீட்டில் இரவு 10.30 மணிக்கு வெப்பம் மிகுந்த சூழ்நிலையில் 90 நிமிடங்கள் தண்ணீர் இல்லாமல் தனியாக விட்டுவிட்டு, போக்கிமோன் கோ விளையாடுவதற்காக காரில் சென்றுவிட்டனர்.


குழந்தையின் அழுகுரல் கேட்டு போலீசுக்கு தகவல் பறக்க போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டுள்ளனர்.


பின்னர், போக்கிமோன் கோ விளையாடுவதற்காக குழந்தையை தனியாக விட்டு சென்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். இனியாவது திருந்துவார்களா? தெரியலையேப்பா...



Find Out More:

Related Articles: